வனவிலங்குகள் பற்றிய கணக்கெடுப்பு அறிக்கை நாளை (28) வௌியிடப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த இதனைத் தெரிவித்தார்.
இதன்போது ” பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகள், மயில்கள் மற்றும் அணில்கள் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அறிக்கையினை தாம் வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாகவும், குறித்த கணக்கெடுப்புக்கு அமைவாக, அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தாம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.