• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
IPL 2025; ராஜஸ்தானை எட்டு விக்கெட்டுகளால் வீழ்த்திய கொல்கத்தா!

IPL 2025; ராஜஸ்தானை எட்டு விக்கெட்டுகளால் வீழ்த்திய கொல்கத்தா!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/03/27
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

2025 இந்தியன் பிரீமியர் லீக்கில் நேற்றிரவு (26) நடைபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான தனது இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எட்டு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டிகொக் 61 பந்துகளில் 97 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்று கொல்கத்தாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஈடன் கார்டன்ஸ் போட்டியில் சிறப்பாக விளையாடத் தவறிய டி கொக், தனது உண்மையான திறமையை இந்த ஆட்டத்தில் வெளிப்படுத்தி 151 ஓட்ட சேஸிங்கை ஒரு சிக்ஸருடன் நிறைவுக்கு கொண்டு வந்தார்.

நடப்பு ஐ.பி.எல். சீசனில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியை சந்தித்த தருணம் இதுவாகும்.

குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான 2025 இந்தியன் பிரீமியர் லீக்கின் ஆறாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ளத் தீர்மானித்தது.

போட்டிக்கு முன்னதாக இரு அணிகளும் தலா ஒரு மாற்றத்தைச் செய்தன.

ராஜஸ்தான் அணியில் ஃபசல்ஹக் ஃபரூக்கிக்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா சேர்க்கப்பட்டார்.

காயமடைந்த சுனில் நரைருக்குப் பதிலாக கொல்கத்தா அணிக்காக மொயீன் அலி அறிமுக வீரராக நியமிக்கப்பட்டார்.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் 20 ஓவர்களில் 151/9 ஓட்டங்களை எடுத்தது.

blank

சுழற்பந்து வீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் மொயீன் அலி ஆகியோர் மிடில் ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

வேகப்பந்து வீச்சாளர்கள் ஹர்ஷித் ராணா மற்றும் வைபவ் அரோராவும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர், 152 ஓட்டம் இலக்கு என்று பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த கொல்கத்தா அணி ஆரம்பத்தில் மொயீன் அலி (5) மற்றும் தலைவர் அஜிங்க்யா ரஹானே (18) ஆகியோரை இழந்தது.

ஆனால் டி கொக் ஒரு முனையை உறுதியாகப் பிடித்து, இளம் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷியுடன் இணைந்து நல்லதொரு பலமான இணைப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால், கொல்கத்தா 17.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 153 ஓட்டங்களை குவித்து வெற்றி இலக்கினை கடந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக குயின்டன் டிகொக் தெரிவானார்.

கொல்கத்தா அணியின் ஆட்ட போட்டியானது மார்ச் 31 அன்று மும்பை அணியுடன் வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: IPL 2025KolkataRajasthanகொல்கத்தாராஜஸ்தான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வனவிலங்குகள் பற்றிய கணக்கெடுப்பு அறிக்கை நாளை வௌியீடு!

Next Post

இராமேஸ்வர மீனவர்கள் 11 பேரைக் கைது செய்த இலங்கைக் கடற்படை!

Related Posts

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!
இலங்கை

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

2025-11-30
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி
இலங்கை

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

2025-11-30
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!
இலங்கை

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

2025-11-30
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!
இலங்கை

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

2025-11-30
குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்
இலங்கை

25 மாவட்டங்களை பாதித்த அனர்த்த நிலை-உயிரிழப்புகள் அதிகரிப்பு!

2025-11-30
அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக 1.2 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கம்! 
இலங்கை

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு  விசேட உரை!

2025-11-30
Next Post
பசுமலைக்கு காதலியை காண சென்ற திருமலை இளைஞன் கைது

இராமேஸ்வர மீனவர்கள் 11 பேரைக் கைது செய்த இலங்கைக் கடற்படை!

பங்காளதேஷின் தேசிய தினத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

பங்காளதேஷின் தேசிய தினத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு-உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகல்

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு-உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகல்

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

0
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

0
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

0
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

0
குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்

25 மாவட்டங்களை பாதித்த அனர்த்த நிலை-உயிரிழப்புகள் அதிகரிப்பு!

0
லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

2025-11-30
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

2025-11-30
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

2025-11-30
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

2025-11-30
குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்

25 மாவட்டங்களை பாதித்த அனர்த்த நிலை-உயிரிழப்புகள் அதிகரிப்பு!

2025-11-30

Recent News

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

2025-11-30
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

2025-11-30
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

2025-11-30
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

2025-11-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.