தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய, 2025 மார்ச் மாதத்தில் நாட்டின் முதன்மை பணவீக்கம் -1.9% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நாட்டின் பணவீக்கம் இவ்வாண்டின் ஜனவரி மாதத்தில், -3.9% ஆக பதிவாகியிருந்ததாகவும், உணவுப் பிரிவில், 2025 பெப்ரவரி மாதத்தில் -1.1% ஆக இருந்த பிரதான பணவீக்கம், 2025 பெப்ரவரி மாதத்தில் -0.8% ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2025 பெப்ரரி மாதத்தில் -6.0% ஆக இருந்த உணவு அல்லாத வகையின் பிரதான பணவீக்கம், 2025 பெப்ரவரி மாதத்தில் -4.0% ஆகக் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.