இலங்கை, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் ஒரு அற்புதமான மகளிர் முத்தரப்பு ஒருநாள் போட்டியில் மோதவுள்ளன.
அனைத்து போட்டிகளும் கொழும்பில் அமைந்துள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும்.
இந்தத் தொடர் ஏப்ரல் 27 ஆம் திகதி இலங்கை அணியை இந்தியா அணி எதிர்கொள்ளும் போது தொடங்குகிறது.
ஒவ்வொரு அணியும் நான்கு ஆட்டங்களில் விளையாடும்.
மேலும், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2025 மே 11 ஆம் திகதி இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெறும்.
முத்தரப்பு தொடரை ரசிகர்கள் இலவசமாகக் காண வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.