தாம் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் நிர்வாக மற்றும் நிதி தொடர்பான தொழில்முறைமைக் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யுமாறு வலியுறுத்தி வடமாகாணத்தைச் சேர்ந்த விவசாய போதனாசிரியர்கள் சுகயீன விடுமுறைப்போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய போதனாசிரியர்களினால் ஆற்றப்படும் விவசாய விரிவாக்கம் தொடர்பான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.