அதுருகிரியவில் ‘கிளப் வசந்த’ கொலையின் முக்கிய சந்தேக நபரான பிரபல பாதாள உலகக் குற்றவாளியான ‘லொக்கு பட்டி’ என்று அழைக்கப்படும் சுஜீவ ருவன்குமார டி சில்வா பெலாரஸில் இருந்து இன்று காலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
பல வழக்குகளுடன் தொடர்புடைய ‘லொக்கு பட்டி’, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெலாரஸில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, குற்றப் புலனாய்வுத் துறை அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் இன்று காலை 7.43 மணியளவில் துபாயிலிருந்து ஒரு தனியார் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்தின் மூலம் லொக்கு பட்டி நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
கடந்த ஆண்டு அதுருகிரியவில் உள்ள ஒரு பச்சை குத்தும் நிலையத்தில் ‘கிளப் வசந்த’ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான ‘லொக்கு பட்டி’, படுகொலையைத் திட்டமிட்டதுடன் அதற்கு நிதியளித்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.