நேற்று நடைபெற்ற உள்ளுராட்சிமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகரசபை உட்பட பல்வேறு உள்ளுராட்சிமன்றங்களிலும் இலங்கை தமிழரசுக்கட்சி வெற்றிவாகை சூடியுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் 20 வட்டாரங்களில் 16 வட்டாரங்களை இலங்கை தமிழரசுக்கட்சி கைப்பற்றிய நிலையில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
இதேபோன்று ஏறாவூர்ப்பற்று பிரதேசபை தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி வெற்றிபெற்றதையடுத்து அங்கும் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளைப்பெற்ற ஊடகவியலாளர் செ.நிலாந்தனின் ஆதரவாளர்களினால் தமிழரசுக்கட்சியின் சின்னம் கொண்ட கேக் வெட்டப்பட்டு கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















