சிந்து நதி நீர் பங்கீடு, காஷ்மீர் உளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று பாக்கிஸ்தான் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக தாக்குதல் நடைபெற்று வந்த நிலையில் இந்த தாக்குதல் முழுமையான போருக்கு வழிவகுக்கும் என தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் நேற்று (10) அறிவித்தார்.
இதை அடுத்து, பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இன்று காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.
இதன்போது, எங்கள் பாதுகாப்பிற்காக நாங்கள் எதையும் செய்வோம் எனவும் மசூதிகள் தாக்கி அழிக்கப்பட்டு அப்பாவிகள் உயிரிழந்தனர். பாகிஸ்தான் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. நமது ராணுவ ரீதியிலான கொள்கைகளில் நாம் வெற்றியடைந்தோம்.
ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது, பாகிஸ்தான் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிபெற்றுள்ளது. சிந்து நதி நீர் பங்கீடு, காஷ்மீர் உள்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தானுக்கு தேவை ஏற்படும்போது உதவி செய்தமைக்கு எங்கள் நம்பகமான நண்பனான சீனாவுக்கு நன்றி கூருவதாகவும் அவர் தெரிவித்தார்.