முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (19) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து, மே 26 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அ லத்கமகேவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு வருகைதந்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது சீன நிறுவனமொன்றிடமிருந்து தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பிலேயே அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மேற்படி வழக்கு விசாரணைகளை இன்று (19) முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவருக்கு விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.