ஜெனீவாவில் நடந்த உலக சுகாதார சபையில் உரையாற்றிய இலங்கையின் சுகாதார அமைச்சர் கலாநிதி நளிந்த ஜெயதிஸ்ஸ, சுகாதார நிபுணர்களின் இடம்பெயர்வு குறித்து கவலை தெரிவித்தார்.
இது நாட்டின் சுகாதார அமைப்பு மற்றும் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
2022 மற்றும் 2025 க்கு இடையில், ஆயிரக்கணக்கான சுகாதார வல்லுநர்கள் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர்.
இது நாட்டின் சுகாதார அமைப்புக்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
726 ஆலோசகர்கள், 1116 மருத்துவ அதிகாரிகள் மற்றும் கிட்டத்தட்ட 2800 செவிலியர் அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
எனவே, சர்வதேச சுகாதாரப் பணியாளர் ஆட்சேர்ப்பு குறித்த WHO உலகளாவிய நடைமுறை விதிகளை திறம்பட செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.