• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
IPL 2025 இறுதிப் போட்டி; பஞ்சாப் – பெங்களூரு இடையிலான மோதல் இன்று!

IPL 2025 இறுதிப் போட்டி; பஞ்சாப் – பெங்களூரு இடையிலான மோதல் இன்று!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/06/03
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகள் மோத உள்ளன.

பட்டத்தை தீர்மானிக்கும் போட்டியானது இன்று (03) இரவு 07.30 மணிக்கு அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த சீசனின் இறுதிப் போட்டி கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஏனெனில் இரு அணிகளும் தங்கள் முதல் ஐ.பி.எல். பட்டத்துக்காக ஒன்றுடன் ஒன்று முட்டி மோதவுள்ளன.

பல ஆண்டுகளாக, இரு அணிகளும் ஒரு தீவிர ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளன.

இப்போது இறுதியாக தங்கள் ரசிகர்களுக்கு ஒரு கிண்ணத்தை பரிசாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த ஆட்டத்தில் களம் காணுகின்றன.

Image

பஞ்சாப் கிங்ஸ்

லீக் கட்டத்தின் முடிவில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான PBKS அணி RCB அணியை மிகக் குறுகிய வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

இரு அணிகளும் 14 போட்டிகளில் 19 புள்ளிகளுடன் முடித்தன.

ஆனால் PBKS அணி நிகர ரன் விகிதத்தில் சிறந்து விளங்கியதால் முதலிடத்தைப் பிடித்தது.

PBKS அணி ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் இரண்டாவது முறையாக இன்று பங்கேற்கிறது.

2014 ஆம் ஆண்டு ஜோர்ஜ் பெய்லி தலைமையிலான PBKS அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் பரபரப்பான ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது.

blank

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு

நடப்பு சீசனில் புள்ளிகள் பட்டியலில் ரஜத் பட்டிதர் தலைமையிலான RCB அணியானது இரண்டாவது இடத்தைப் பிடித்தது மற்றும் முதல் தகுதிச் சுற்றில் PBKS அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

RCB அணி தனது நான்காவது ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் இன்று விளையாடவுள்ளது.

அவர்கள் 2009 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளனர்.

அனில் கும்ப்ளே தலைமையிலான அணி இறுதிப் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.

2011 ஆம் ஆண்டு டேனியல் வெட்டோரி தலைமையிலான RCB அணி இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸிடம் தோல்வியடைந்தது.

விராட் கோலி தலைமையிலான RCB அணி 2016 ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் டேவிட் வோர்னரின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் தோல்வியடைந்தது.

எனவே, நடப்பு சீசனில் பெருமைக்காக இரண்டு அணிகள் போட்டியிடுவதால், ரசிகர்கள் ஒரு பரபரப்பான போட்டியை எதிர்பார்க்கலாம்.

blank

அதிக ஓட்ட எண்ணிக்கைக்கான வாய்ப்பு

இறுதிப் போட்டி நடைபெறும் ரேந்திர மோடி மைதானம், இந்த சீசனில் தொடர்ந்து துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக உள்ளது.

அதிக ஓட்ட எண்ணிக்கைகளை குவிப்பதற்கு பெயர் பெற்ற RCB மற்றும் PBKS இடையேயான வரவிருக்கும் மோதலும் அதே போக்கைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் இதே மைதானத்தில் நடைபெற்ற குவாலிஃபையர் 2 போட்டியில், பந்து வீச்சாளர்கள் சிறப்பான திறனை வெளிப்படுத்த போராடினர்.

மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்து 203/6 என்ற மகத்தான ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தது.

ஆனால், பஞ்சாப் அணி ஒரு ஓவர் மீதமுள்ள நிலையில் அதை முறியடிக்க முடிந்தது.

ஆடுகள நிலைமைகள் மற்றும் அண்மைய செயல்திறனைக் கருத்தில் கொண்டு, இறுதிப் போட்டி மற்றொரு அதிக ஓட்டம் குவிக்கப்படும் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

blank

மழையால் பாதிக்கப்பட்டால் என்ன ஆகும்?

இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியும் மோசமான வானிலை காரணமாக தாமதமானது.

பெரும்பாலான நாட்களில் வெப்பமான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைகள் எதிர்பார்க்கப்படும் அதே வேளையில், செவ்வாய்க்கிழமை மாலையில் மழை பெய்யும் என்று உள்ளூர் வானிலை ஆய்வு நிலைய அறிக்கைள் சுட்டிக்காட்டுகின்றன.

இது சாத்தியமான இடையூறு குறித்த கவலைகளை எழுப்புகிறது.

இதனிடையே, வானிலை தாமதங்களைச் சமாளிக்க இரண்டு மணிநேர மேலதிக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று போட்டியை முடிக்க முடியாவிட்டால், அது மேலதிக நாளான புதன்கிழமை (04) மீண்டும் தொடங்கும்.

மேலதிக நாள் ஆட்டமும் மழையால் இரத்து செய்யப்பட்டால், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதால் பஞ்சாப் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்லும்.

Image

Related

Tags: IPL 2025PBKSRCBபஞ்சாப்பெங்களூரு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுன்னாகம் பகுதியில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 20பேர் கைது!

Next Post

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு யாழில் சிரமதானப்பணி முன்னெடுப்பு!

Related Posts

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!
இலங்கை

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

2025-11-30
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி
இலங்கை

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

2025-11-30
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!
இலங்கை

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

2025-11-30
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!
இலங்கை

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

2025-11-30
குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்
இலங்கை

25 மாவட்டங்களை பாதித்த அனர்த்த நிலை-உயிரிழப்புகள் அதிகரிப்பு!

2025-11-30
அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக 1.2 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கம்! 
இலங்கை

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு  விசேட உரை!

2025-11-30
Next Post
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு யாழில் சிரமதானப்பணி முன்னெடுப்பு!

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு யாழில் சிரமதானப்பணி முன்னெடுப்பு!

கிளிநொச்சி வீட்டில் மறைத்து வைப்பட்டிருந்த பாரியளவிலான கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி வீட்டில் மறைத்து வைப்பட்டிருந்த பாரியளவிலான கஞ்சா மீட்பு!

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 113 வது மாநாட்டில் செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 113 வது மாநாட்டில் செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

0
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

0
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

0
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

0
குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்

25 மாவட்டங்களை பாதித்த அனர்த்த நிலை-உயிரிழப்புகள் அதிகரிப்பு!

0
லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

2025-11-30
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

2025-11-30
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

2025-11-30
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

2025-11-30
குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்

25 மாவட்டங்களை பாதித்த அனர்த்த நிலை-உயிரிழப்புகள் அதிகரிப்பு!

2025-11-30

Recent News

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

2025-11-30
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

2025-11-30
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

2025-11-30
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

2025-11-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.