லைகா நிறுவனத்திற்கு 21 கோடி ரூபாயை (இலங்கை மதிப்பில் 73.22 கோடி ரூபாய்) விஷால் வட்டியுடன் செலுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த குறித்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் சென்னை உயர் நீதமன்றம் இன்று இந்த அதிரடி உத்தரவினை பிறப்பித்தது.
நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி படத் தயாரிப்பு நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியரான அன்புச் செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபானைக் கடன் பெற்றிருந்தார் எனவும், இந்த கடன் தொகையை அவருக்காக லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது எனவும் இதையொட்டி கடன் தொகை முழுவதையும் திருப்பிச்செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்கவேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறு இருப்பினும் குறித்த ஒப்பந்தத்தை மீறி, ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை தன்னிச்சையாக வெளியிடுவதாகக் கூறி விஷாலின் பட நிறுவனத்துக்கு எதிராக லைகா சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
குறித்த வழக்கு தொடர்பான அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் லைகா நிறுவனத்திற்கு 21 கோடி ரூபாயை 30 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என சென்யை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.