மூவரின் டி.என்.ஏவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட குழந்தைகள், பரம்பரை நோயின்றி பிறப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தமுறையில் இங்கிலாந்தில் 8 குழந்தைகள் பிறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2015 இல் இங்கிலாந்தில் அங்கீகரிக்கப்பட்ட இந்த புதிய நடைமுறை ஒரு தாய் மற்றும் தந்தையிடமிருந்து பெறப்பட்ட கருமுட்டை மற்றும் விந்தணுவை, தானம் பெற்ற பெண்ணின் இரண்டாவது கருமுட்டையுடன் இணைக்கும் முறையாக இது அமைகிறது.
இது “மூன்று பெற்றோர் குழந்தைகள்” என்ற வார்த்தைக்கு வழிவகுத்துள்ளதுடன் குழந்தையின் டி.என்.ஏவில் சுமார் 0.1% மட்டுமே நன்கொடையாளரிடமிருந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கிலாந்தின் நியூகேஸில் பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் , மேற்கொண்டு வெளியிட்ட ஆய்வு முடிவிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.




















