ஹோர்முஸ் நீரிணையை மீளத் திறப்பது தொடர்பில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
தெஹ்ரானின் பேச்சுவார்த்தைக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள இந்த தகவலில், ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை ஈரான் மற்றும் ஓமான் இடையே பகிர்ந்து கொள்வது தொடர்பில் அமெரிக்கா – கட்டார் முன்வைத்த உடன்பாட்டிற்கு ஈரான் வெளிவிவகார அமைச்சர் இணக்கம் தெரிவித்ததாக இஸ்ரேலிய ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஈரானிய இராணுவ வட்டாரமொன்றை மேற்கோள்காட்டிய ஃபார்ஸ் நிறுவனம், ஈரானின் புரட்சிகர காவல்படை (Revolutionary Guards) உடன் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளாத எந்தவொரு கப்பலுக்கும் ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையின் நிலைமை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இதுகுறித்த பதற்றம் தொடர்கின்றது.















