பல கனவுகளுடன் பஹ்ரைன் சென்ற இந்திய இனைஞர் ஒருவர் விமானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஹ்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய 27 வயது அப்ஸல் என்ற இந்திய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பஹ்ரைன்-கோழிக்கோடு விமானம் தரையிறங்க சில நிமிடங்கள் இருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, குறித்த இளைஞர் அப்பா, அம்மா மற்றும் 3 தங்கைகள் அடங்கிய குடும்பத்தின் முதுகெலும்பாக இருந்ததோடு குடும்பத்தை காப்பாற்றும் கனவுடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பஹ்ரைன் சென்றுள்ளார்.
பஹ்ரைன் சென்றது முதல் அவர் தொடர்ச்சியாக காய்ச்சல், சளி உள்ளிட்ட உடல்நலக்குறைவுகள் காரணமாக அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை மோசமானதால் சிகிச்சைக்காக தாயகம் திரும்பிய போது விமானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குடும்பத்தினரையும் ஊர்மக்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



















