வியட்நாமின் வடக்கு மாகாணமான டியென் பியெனில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று அரசு ஊடகங்கள் வெள்ளிக்கிழமை (01) செய்தி வெளியிட்டுள்ளன.
வியாழக்கிழமை இரவு பல மணி நேர கனமழைக்குப் பின்னர் வெள்ள நீர் வேகமாக உயர்ந்தது, தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை சூழ்ந்தது மற்றும் மாகாணத்தின் மலைப் பகுதிகளை மூழ்கடித்ததுடன், மண்சரிவுகளை ஏற்படுத்தியதாக ien Phong செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
மலை கிராமமான ஸா டங் தான் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்ததாகவும், அங்கு ஆறு பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளம் காரணமாக மாகாணத்தின் பல பகுதிகளுக்கான போக்குவரத்து மற்றும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மாகாண மீட்பு குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தடையாக இருப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


















