ஹபரணை, புவக்பிட்டிய பகுதியில் நேற்று (03) இரவு திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் ரயிலில் காட்டு யானை மோதி விபத்துக்குள்ளானது.
ஹபரணைக்கும் பலுகஸ்வெவவிற்கும் இடையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மோதலில் ஈடுபட்ட யானைக்கு சுமார் 20 வயது இருக்கும் என வனவிலங்கு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தாக்குதலின் காரணமாக யானையின் முன் வலது காலில் கடும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரயில் சாரதியின் அலட்சியமே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
காயமடைந்த காலுக்கு இன்று (04) பந்துலகம கால்நடை மருத்துவப் பிரிவு சிகிச்சை அளிக்கத் தொடங்கும் என்று வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக ரித்திகல மற்றும் கெகிராவ வனவிலங்கு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














