நாளை (06) காலை 10.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் அமுல்படுத்தப்படவிருந்த ஒன்பது மணித்தியால நீர் வெட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
கொழும்பு 01 முதல் 15 வரையிலான பகுதிகளில் நாளை காலை 10.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை 9 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை முன்னதாக அறிவித்திருந்த நிலையில் இது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
















