‘கஜ்ஜா’ எனப்படும் அனுர விதானகமகே கொலை தொடர்பாக ‘பெகோ சமன்’ மற்றும் ‘தெம்பிலி லஹிரு’ ஆகியோரை டிசம்பர் 02 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இன்று (17) பொலிஸாருக்கு அனுமதி அளித்துள்ளது.
பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் என கூறப்படும் “பெகோ சமன்” மற்றும் “தெம்பிலி லஹிரு” ஆகியோர் சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.















