நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 7 இராமேஸ்வரம் மீனவர்களையும் நளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த ஒகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி நெடுந்தீவு அருகே குறித்த 07 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இன்று (17) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.















