• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கடல் பாதுகாப்புக்கும் போதைப் பொருள் ஒழிப்புக்கும் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம்! – பிரதமர்

கடல் பாதுகாப்புக்கும் போதைப் பொருள் ஒழிப்புக்கும் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம்! – பிரதமர்

Ilango Bharathy by Ilango Bharathy
2025/09/25
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியக் கடல் பரப்பில் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கும், போதைப்பொருள் கடத்தலைத் தடுத்து நிறுத்துவதற்கும் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்

தேசியப் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதுடன் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை அமுல்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்

இந்தியக் கடல் பரப்பின் கடல்சார் நோக்கு’ என்ற தொனிப்பொருளில் இலங்கை கடற்படையால் 12ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட ‘காலி கலந்துரையாடல் 2025 சர்வதேச கடல்சார் மாநாட்டில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது”

பல வருடங்களாக, இந்த கலந்துரையாடல் இந்தியக் கடல் பரப்பின் எதிர்காலம் குறித்த விவாதங்களுக்கான சர்வதேச தளமாக இருந்து வருகின்றது. இந்தியக் கடல் பரப்பானது உலகின் மிகவும் முக்கியமான மூலோபாய நன்மையைக் கொண்ட கடல் பரப்புகளில் ஒன்றாகும்.

இந்தியக் கடல் பரப்பானது அமைதி, பாதுகாப்பு, நிலையான தன்மை, நீதி மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிர்வாகிக்கப்படும் ஒரு பிரதேசமாக மாற்றுவதற்கு அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்றுவதே எமது நோக்கமாகும். நவீன உலகின் கடல் பரப்பானது முன் ஒருபோதும் இல்லாத சவால்களை எதிர்கொண்டுள்ளது.

காலநிலை மாற்றம், கடல் மட்ட உயர்வு, அதிகப்படியான மீன்பிடித்தல் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைதல் ஆகியவை உயிரினப்பன்மை, மனிதப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றன. கடல் சூழலைப் பாதுகாப்பது நமது தேசிய இருப்புக்கு இன்றியமையாததாகும், அதனாலேயே நாம் வலுவான பாதுகாப்பு கட்டமைப்பு, கடல் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு ஆகியவற்றை ஆதரிக்கின்றோம்.

பயனுள்ள கடல்சார் நிர்வாகமும் முக்கியமானதாகும். பாரம்பரிய அச்சுறுத்தல்களுக்கு மேலதிகமாக, இலங்கை போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பாரம்பரியமற்ற சவால்களையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. அது எமது கடற்படை மற்றும் கரையோரக் காவல்படையின் முக்கிய பணியாக இருந்து வருகின்றது என்பதையும் நான் இங்கே வலியுறுத்த விரும்புகிறேன்.

தேசியப் பாதுகாப்பு மற்றும் பொதுச் சுகாதாரத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றது. அதேபோன்று, போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராட அரசாங்கம் ஏற்கனவே தடுப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்தி வருகிறது. போதைப்பொருள் மற்றும் கடத்தல்காரர்களைக் கைது செய்வதற்கான தினசரி ரோந்து சேவை, ஆய்வுகள் மற்றும் புலனாய்வு தகவல்களின் அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் நமது மக்களையும் கடல் பரப்பையும் பாதுகாக்க இலங்கை கடற்படை புரியும் அர்ப்பணிப்பைப் பாராட்ட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.

இந்தியக் கடல் பரப்பில் காணப்படுகின்ற இந்த சவால்களை இலங்கையால் மாத்திரம் தனித்து எதிர்கொள்ள இயலாது. ஆகையினால் பயனுள்ள கடல்சார் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஏனைய நாடுகளின் செயற்பாட்டு ரீதியிலான ஒத்துழைப்பும் அவசியமாகின்றது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் ”பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, அட்மிரல் ஒப் த பிளீட் வசந்த கரன்னாகொட, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்த, இந்திய கடற்படைத் தளபதி தினேஷ் கே திரிபாதி, இராணுவத் தளபதி லசந்த ரொட்ரிகோ, விமானப்படைத் தளபதி வாசுபந்து எதிரிசிங்க, கடற்படைத் தளபதி காஞ்சன பானகொட, கடற்படைப் பணிக்குழாம் தலைமை அதிகாரி டேமியன் பெர்னாண்டோ உள்ளிட்ட முப்படையின் அதிகாரிகளும்  கலந்துகொண்டிருந்தனர்.

blank blank blank blank

Related

Tags: ஹரிணி அமரசூரிய
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக BCCI முறைப்பாடு!

Next Post

ஊழல், போதைப்பொருள் மற்றும் போர்களுக்கு எதிராக உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் – ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி உரை

Related Posts

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 
இலங்கை

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

2025-12-01
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!
BREAKING

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

2025-12-01
நுவரெலியா மாவட்டத்தில்  261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு
இலங்கை

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

2025-12-01
வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து
இலங்கை

வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

2025-12-01
மன்னாரில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாரிய அளவில் சொத்துக்களுக்கு சேதம்!
மன்னாா்

மன்னாரில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாரிய அளவில் சொத்துக்களுக்கு சேதம்!

2025-12-01
வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு
இலங்கை

வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

2025-12-01
Next Post
ஊழல், போதைப்பொருள் மற்றும் போர்களுக்கு எதிராக உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் –  ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி உரை

ஊழல், போதைப்பொருள் மற்றும் போர்களுக்கு எதிராக உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் – ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி உரை

மார்பகப் புற்றுநோய் குறித்து எச்சரிக்கை!

மார்பகப் புற்றுநோய் குறித்து எச்சரிக்கை!

முப்படைகளுக்கு அழைப்பு; வர்த்தமானி வெளியீடு!

முப்படைகளுக்கு அழைப்பு; வர்த்தமானி வெளியீடு!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

0
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

0
நுவரெலியா மாவட்டத்தில்  261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

0
வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

0
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

0
மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

2025-12-01
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

2025-12-01
நுவரெலியா மாவட்டத்தில்  261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

2025-12-01
வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

2025-12-01

Recent News

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

2025-12-01
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

2025-12-01
நுவரெலியா மாவட்டத்தில்  261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

2025-12-01
வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

2025-12-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.