பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 27,953 பேர் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், சந்தேகத்தின் பேரில் 614 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 20 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய நிலையில், அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் நீதிமன்றத்தினால் பிடியானை பிறப்பிக்கப்பட்ட 270 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 123 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மதுபோதையில் வாகனம் செலுத்திய 22 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 11 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் போக்குவரத்து முறைகேடு தொடர்பான குற்றங்களுக்காக 3,843 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிலு தெரிவித்துள்ளது.














