இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக 03 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி இலங்கை கடற்படை அவர்களை கைது செய்துள்ளது.
நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறியே 01 படகுடன் 03 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
IND/TN/11/MM/96 எனும் தொடரிலக்கத்தை கொண்ட படகையும் மீனவர்களையும் கைது செய்த கடற்படை விசாரணைகளின் பின்னர் நீரியல்வள துறையினரிடம் ஒப்படைக்கவுள்ளனர்.
இதேவேளை, மீனவர்கள் மீது இலங்கை நீர் பரப்பு எல்லைக்குள் அடக்கிய யாழ்ப்பாண கடற்பரப்புக்குள் தலைமையதிபதியால் வழங்கப்படும் வெளிநாட்டு மீன்பிடி வள்ளம் தொடர்பிலான அனுமதிப்பத்திரம் இல்லாது கடல் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டமை , மேற்கூறிய அனுமதி பத்திரம் இன்றி இலங்கை நீர்பரப்பு எல்லைக்குள் நுழைந்து மீன்பிடி உபகரணங்களை(வலை)படகு நிற்கின்ற வரைக்கும் தொடக்கறுத்து வைக்காமை , நெடுந்தீவு கடற்பரப்புக்குள் இழுவை மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமை , போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு நீரியல் வளத்துரையினரால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை தமிழகத்தைச சேர்ந்த 52 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த பல ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட 249 மீன்பிடிப்படகுகளும் இன்னும் மீட்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 43 படகுடன் 344 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுளள்ளமை குறிப்பிடத்தக்கது.

















