யாழ் இந்தியத்துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த 200பேருக்கு பொங்கல் பானை வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது. யாழ் இந்தியத்துணைத்தூதுவர் சாய் முரளி கலந்து கொண்டு குறித்த பொங்கல் பானையை வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.














