அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச செயலாளர் டீ. எம். எம் அன்ஸார் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். உதுமான்லெப்பை, எம்.எஸ்.அப்துல் வாஸித் மற்றும் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.எல்.எம் அதாவுல்லாஹ், உதவி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலக உத்தியோத்தர்கள், முப்படையினர், திணைக்களங்களின் உயர் அதிகாரிகள்,பொது அமைப்புக்களின் தலைவர்கள்,அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரத்தியோக செயலாளர்கள் எனப்பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


















