கொழும்பு, கடற்கரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜிந்துபிட்டி பகுதியில் ஜனவரி 16 ஆம் திகதி இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் அவர் நேற்று (29) கைது செய்யப்பட்டார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 44 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.
அதே நேரத்தில் ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் காயமடைந்து கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகளுக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் நேற்று பிற்பகல் கொழும்பு, ஹெட்டியாவத்தை பகுதியில் சந்தேக நபரைக் கைது செய்தனர்.
மேலும் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முச்சக்கர வண்டியும் பொலிஸார் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 13 இல் வசிக்கும் 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று (30) புதுக்கடை, நீதிமன்ற வளாகத்தில் உள்ள எண் 05 நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
சம்பவம் தொடர்பாக கடற்கரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.















