• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானியாவில் ரயில் ஓட்டுநர்களுக்கான வயதெல்லை 18 ஆக குறைப்பு!

பிரித்தானியாவில் ரயில் ஓட்டுநர்களுக்கான வயதெல்லை 18 ஆக குறைப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/10
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவில் எதிர்வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் ஏற்படக்கூடிய ஓட்டுநர் தட்டுப்பாடு அச்சத்தால், ரயில் ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச வயதெல்லையை 18-ஆகக் குறைக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரிட்டனில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி (apprenticeship) வாய்ப்புகளை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரயில் ஓட்டுநர்கள் பலர் ஓய்வு பெறும் வயதை நெருங்கி வருவது குறித்த கவலைகளைத் தொடர்ந்து, 18 வயதுடையவர்கள் விரைவில் ரயில்களை ஓட்ட அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ரயில் ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச வயது வரம்பை 20-லிருந்து 18-ஆகக் குறைப்பதற்கான சட்டமூலம் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை (DfT) அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்த மாற்றம் ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

எதிர்வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் நான்கில் ஒரு பங்கு ரயில் ஓட்டுநர்கள் ஓய்வு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது 30 வயதுக்குட்பட்ட ஓட்டுநர்கள் 25-ல் ஒருவர் மட்டுமே உள்ளனர் எனவும் மேலும், ஓட்டுநர்களில் 9-ல் ஒருவர் மட்டுமே பெண்கள் எனவும் சிறுபான்மையின இனத்தைச் சேர்ந்த ஓட்டுநர்களின் விகிதம் 13%-க்கும் குறைவாகவே உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பிரிட்டனில் 18 வயதுடையவர்கள் ஏற்கனவே லண்டன் சுரங்க ரயில்கள் (Tube trains) மற்றும் பேருந்துகளை ஓட்ட அனுமதிக்கப்படுவதால், இந்த மாற்றம் ஒட்டுமொத்த போக்குவரத்துத் துறையிலும் ஒரு “சமமான நிலையை” (level the playing field) உருவாக்கும் என போக்குவரத்துத் துறை தெரிவிக்கின்றது.

இது சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் நடைமுறைக்கு இணையாக பிரித்தானியாவும் இந்த திட்டத்தை கொண்டுவரவுள்ளது.

மேலும், பள்ளி கட்டிடத் திட்டங்களில் பணிபுரியும் கட்டுமான நிறுவனங்கள், தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு 13,000 புதிய இடங்களை வழங்க வேண்டும் என்பதும் அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முல்லைதீவில் பல்கலைக்கழக பீடம் ஒன்று அமைக்க நடவடிக்கை!

Next Post

நெருக்கடி நிலைமை முதல் புத்தரின் நினைவுச் சின்னங்கள் வரை இலங்கையுடன் இந்தியா!

Related Posts

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்  – மத்திய அரசுக்கு விஜய் கடிதம்
இந்தியா

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

2026-08-10
படகுச் சேவைகளில் ஏற்பட்ட பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட தீவுப்பகுதி தொழில்துறையினருக்கு 10 மில்லியன் பவுண்டுகள் நிதி உதவி!
இங்கிலாந்து

படகுச் சேவைகளில் ஏற்பட்ட பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட தீவுப்பகுதி தொழில்துறையினருக்கு 10 மில்லியன் பவுண்டுகள் நிதி உதவி!

2026-08-10
வடகடல் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வு திட்டங்கள் குறித்து முடிவெடுக்கப் பிரித்தானியப் பிரதமருக்கு அழுத்தம்!
இங்கிலாந்து

வடகடல் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வு திட்டங்கள் குறித்து முடிவெடுக்கப் பிரித்தானியப் பிரதமருக்கு அழுத்தம்!

2026-08-10
கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் ஆறு பேர் காயம்!
இஸ்ரேல்

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் ஆறு பேர் காயம்!

2026-08-10
ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!
இந்தியா

அரசு பணியாளர் பரீட்சை முறைகேடு; ஜார்கண்டில் மாணவர்கள் தடுப்புகளை மீறி பேரணி!

2026-08-10
சவூதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்!
ஈரான்

சவூதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்!

2026-08-10
Next Post
நெருக்கடி நிலைமை முதல் புத்தரின் நினைவுச் சின்னங்கள் வரை இலங்கையுடன் இந்தியா!

நெருக்கடி நிலைமை முதல் புத்தரின் நினைவுச் சின்னங்கள் வரை இலங்கையுடன் இந்தியா!

திருகோணமலை சம்பவம்: பிக்குகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

திருகோணமலை சம்பவம்: பிக்குகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

குருணாகலில் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல்!

குருணாகலில் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல்!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.