இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மாற்றத்திற்கான நிகழ்ச்சி நிரலில் உள்ள தாதியர்கள் மற்றும் பிற சுகாதார சேவை ஊழியர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் 3.3% ஊதிய உயர்வைப் பெறுவார்கள் என்று அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.
2026-27 ஆம் ஆண்டிற்கான ஊதிய உயர்வு குறித்த பரிந்துரைகளை அதன் சுயாதீன ஆலோசனைக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இங்கிலாந்து அரசாங்கம் வியாழக்கிழமை (12) தெரிவித்துள்ளது.
இந்த உயர்வு தாதியர்கள் மற்றும் பிரசவ உதவியாளர்கள் முதல் பிசியோதெரபிஸ்டுகள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் வரை 1.5 மில்லியன் பரந்த அளவிலான சுகாதார பணியாளர்களை உள்ளடக்கியது.
குறிப்பாக மருத்துவர்கள், பல் மருத்துவர்கள் மற்றும் மூத்த முகாமையாள்கள் தவிர – ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக தேசிய சுகாதாரப் ஊழியர்கள் நிதியாண்டின் தொடக்கத்திலேயே தங்கள் ஊதிய உயர்வினைப் பெறுவார்கள்.
சுயாதீன தேசிய சுகாதார ஊழியர்களின் ஊதிய மீளாய்வு அமைப்பின் பரிந்துரையைப் பின்பற்றி இந்த ஊதிய உயர்வு அரசாங்கத்தால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
3.3% உயர்வு என்பது 2026-27 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் பொறுப்பு அலுவலகத்தின் முன்னறிவிப்பு பணவீக்க விகிதமான 2.2% ஐ விட அதிகமாக உள்ளது என்று சுகாதாரச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீடிங் சுட்டிக்காட்டியதுடன், வேல்ஷ் அரசாங்கமும் அதே அதிகரிப்புக்கு ஒப்புக் கொண்டதாகவும், மேலும் பரிந்துரை வடக்கு அயர்லாந்திற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


















