நடுக்கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் விக்டோரியா நகர் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் (55) என்ற மீனவர் இன்று காலை விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளார்.
நடுக்கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகில் இருந்த மீனவர் ஜஸ்டின் கடலில் தவறி விழுந்து மாயமானார்.
இதையடுத்து சக மீனவர்கள் கடலில் தேடி இறந்த நிலையில் மீனவர் ஜஸ்டின் உடலை மீட்டு ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு எடுத்து வந்டுள்ளனர்.
இந்நிலையில் உடல் உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனயில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் படகில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ராமேஸ்வரம் சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது














