• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வேலையற்ற பட்டதாரிகளை  உற்பத்தி செய்யும் சமூகம் ? நிலாந்தன்!

வேலையற்ற பட்டதாரிகளை  உற்பத்தி செய்யும் சமூகம் ? நிலாந்தன்!

KP by KP
2026/02/22
in இலங்கை, சிறப்புக் கட்டுரைகள், பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

 

இக்கட்டுரை எழுதப்படுகையில் யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடந்து கொண்டிருக்கிறது. அதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஒரு விவாதம் எழுந்திருக்கிறது.

அரச பல்கலைக்கழகங்களில் நிகழும் பட்டமளிப்பு விழாக்களில் வேலை இல்லாத புதிய தொகுதி பட்டதாரிகள் உற்பத்தி செய்யப்படுகிறார்கள் என்று அந்த வாதப் பிரதிவாதங்களில் சுட்டிக்காட்டப்படுகிறது. அரச வேலை தேடும் மேலும் ஒரு தொகுதி பட்டதாரிகள் இன்று வெளியேறுகிறார்கள் என்று அவர்கள் விமர்சிக்கிறார்கள்.

ஏற்கனவே 4000க்கும் குறையாத பட்டதாரிகள் வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நான் வெளியேற்றப்பட்ட பட்டதாரிகள் என்று எழுதுவதற்கு பதிலாக அரச வேலை இல்லாத பட்டதாரிகள் என்று எழுதுவதே பொருத்தம் என்று கூறுவோர் சமூகத்தில் உண்டு.மேற்படி பட்டதாரிகள் அரச வேலைகளுக்காக காத்திருக்கிறார்கள் என்ற பொருளில் தான் அவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்.அரச வேலை அல்லாத தனியார் நிறுவனங்களில் வேலை செய்ய அவர்கள் தயாரில்லை என்றும் அரச வேலை அல்லாத ஏனைய வேலைகளை அவர்கள் நிரந்தரமானவைகளாகவோ அல்லது பாதுகாப்பானவைகளாகவோ கருதவில்லை என்றும், அதனால் அவர்கள் அரச வேலைகளுக்காக காத்திருக்கிறார்கள் என்றும் விமர்சிக்கப்படுகிறது.

பட்டதாரிகள் ஏன் அரச வேலைக்காக காத்திருக்கிறார்கள்?பின்வரும் காரணங்களை கூறலாம்.

முதலாவது காரணம், ஓய்வூதியம். அதாவது இறக்கும்வரை ஒரு பாதுகாப்பு ஏற்பாடு உண்டு.

இரண்டாவது,அதிகம் கஷ்டப்பட்டு உழைக்க தேவையில்லை.அரச வேலைகளில் குறிப்பிட்ட சில சோதனைகளை எழுதுவதன் மூலமும் மூப்பின் மூலமும் பதவி உயர்வுகளைப் பெறலாம். அங்கே வேலை செய்தால்தான் சம்பளம் என்று இல்லை. எனவே வேலை செய்யாமலும் சம்பளம் வாங்கலாம் என்ற ஒரு நிலை இருப்பதினால் அரசு வேலை கஷ்டப்படத் தேவையில்லாத ஒன்று என்ற கருத்து ஒரு பகுதி பட்டதாரிகள் மத்தியில் உண்டு என்று விமர்சிக்கப்படுகிறது.

மூன்றாவது,அரச உத்தியோகத்துக்கு சமூகத்தில் காணப்படும் மதிப்பு.குறிப்பாக சீதனச் சந்தையில் காணப்படும் மதிப்பு.

மேற்சொன்ன காரணங்களினால்தான் அரச ஊழியத்துக்காக பட்டதாரிகள் காத்திருக்கிறார்கள் என்று விளக்கம் கூறப்படுகிறது. ஆனால் அரச ஊழியத்தில் மேற்கூறிய நன்மைகள் மட்டும் இல்லை. தீமைகளும் உண்டு. குறிப்பாக ஓர் இளம் பட்டதாரி தன் பட்டப் படிப்பை முடித்து வெளியேறும் போது அனேகமாக திருமண வயதை அடைந்திருப்பார். அவர் திருமணம் செய்யும் நபரும் அரசு ஊழியராக இருந்தால், பெரும்பாலும் அவர்களுக்கு கிடைக்கும் முதலாவது அரச ஊழியம் கஷ்டப்பிரதேசத்தில்தான் கிடைக்கும். கஷ்டப் பிரதேசத்தில் அவர்கள் குறைந்தது 8 ஆண்டுகள் வேலை செய்யவேண்டி இருக்கும். இந்த எட்டு ஆண்டுகள் என்ற பருவம் பெரும்பாலும் இல்லறத்தின் தொடக்கப் பருவம். திருமணம் செய்த புதிதில் சந்தோசமாக சுற்றித் திரியும் பருவம். இக்காலகட்டத்தில் அரச ஊழியம் கிடைக்குமாக இருந்தால் அதுவும் கஷ்டப் பிரதேசத்தில் கிடைக்குமாக இருந்தால் என்ன நடக்கும்?

வாழ்க்கையில் அதிகம் சந்தோஷமாக இருக்க வேண்டிய ஒரு பருவம் பயணங்களில் முடிந்துவிடும். அரச ஊழியர்களுக்கான பேருந்துக்காக அதிகாலையில் எழுவதிலும்,வேலை முடிந்து அந்தி சாய்ந்தபின் வீடு திரும்புவதிலும் அந்தக் காலத்தின் பெரும் பகுதி கழித்து விடும். குழந்தை பெறும் போதும் நிலைமை அப்படித்தான் இருக்கும். வீட்டில் குழந்தையை பராமரிக்க முதியவர்கள் இல்லை என்றால் வாழ்க்கை மேலும் சித்திரவதையாகும்.குழந்தையின் மழலையை அனுபவிப்பதற்கும் நேரம் இருப்பதில்லை. ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

எனவே அரச ஊழியத்தில் இருக்கும் பிரதானமான பிரதிகூலம் எதுவென்றால் கஷ்டப் பிரதேசத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதுதான். திருமண வாழ்வில் ஆரம்பப் பருவத்தை,சந்தோஷமாக இருக்கவேண்டிய ஒரு பருவத்தை இப்படி வேலைக்காக மாவட்டங்களுக்கு இடையில் பயணம் செய்வதிலேயே தொலைத்தால் பிறகெப்பொழுது வாழ்க்கையை அனுபவிப்பது ?

ஆனால் அரசு ஊழியத்தை நாடும் பெரும்பாலான பட்டதாரிகள் இதை ஒரு விவகாரமாக எடுத்துக் கொள்வதில்லை. கஷ்டப் பிரதேச வேலையை 8 அல்லது 5 ஆண்டுகளுக்குள் கடந்து விட்டால் பின்னர் வாழ்க்கை முழுக்க சந்தோசமாக இருக்கலாம் என்று அவர்கள் நினைக்கக் கூடும்.

அதேசமயம் அரச ஊழியம் அல்லாத வேறு வேலைகளுக்குப் போக அல்லது தாமாகவே தொழில் முனைவோராகி, ரிஸ்க் எடுத்து புதிய தொழில்துறைகளை ஆரம்பிக்க எத்தனை பட்டதாரிகள் தயார்?

இந்தக் கேள்வியை அதன் பிரயோக அர்த்தத்தில் மறுவளமாக கேட்டால், அரச ஊழியத்துக்கு வெளியே தொழில் முனைவராக ஏழுவதற்குத் தேவையான துணிச்சலையும் தகைமையும் நமது கல்விமுறை பட்டதாரிகளுக்கு வழங்குகிறதா? என்று கேட்கலாம்.

இல்லை.அதுதான் பிரச்சினையே. வேலையில்லாத பட்டதாரிகள் தொழில் முனைவோர்களாய் ஏழுவதற்கும் சொந்தத் தொழிலில் ரிஸ்க் எடுப்பதற்கும் தயாராக இல்லை என்பது அவர்களுடைய தொழில் தொடர்பான மனோ நிலை சம்பந்தப்பட்ட ஒரு விடயம் மட்டுமல்ல. அது அதைவிட ஆழமான பொருளில் நமது கல்வி முறையின் மீதான ஒரு விமர்சனமாகத்தான் முன்வைக்கப்பட வேண்டும். நமது கல்வி முறை தொழில் முனைவோரை உருவாக்கத் தவறுகிறது என்பதனை பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.தொழில் முனைவோருக்குத் தேவையான துணிச்சலையும் சுய ஒழுக்கத்தையும் சமூக விழிப்பையும் புதிய சிந்தனையையும் நமது கல்விமுறை போதிய அளவுக்குக் கட்டியெழுப்பவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு பரவலாக உண்டு.

நமது யூடியூப்பர்களில் ஒரு பகுதியினர் சமூகத்தில் அரிதாகக் காணப்படும் தொழில் முனைவோரைத் தேடிச் சென்று படம்பிடித்து வெளியே கொண்டு வருகிறார்கள். அதனால் தூண்டப்பட்டு தாமும் அவ்வாறு ரிஸ்க் எடுப்பதற்கு எத்தனை பட்டதாரிகள் தயாராக இருக்கிறார்கள்?

வேலையில்லாத பட்டதாரிகளின் தொகை அதிகரிப்பது என்பது பட்டதாரிகளின் குற்றம் அல்ல.அது முதலாவதாக கல்வி முறையில் உள்ள குறைபாடு.

இரண்டாவதாக,வேலை வாய்ப்புகளை உருவாக்கத் தவறிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளில் உள்ள பலவீனம்.

மூன்றாவதாக,தொழில் தெரிவுகள் பற்றிய சமூகத்தின் கூட்டு உளவியலில் உள்ள கோளாறு.

எனவே இதுவிடயத்தில் பட்டதாரிகளைக் குறை சொல்ல முடியாது. அவர்கள் பிழையான கல்விமுறையின் பலியாடுகள்தான்.மிகப்பிழையான பொருளாதாரக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள்.அவர்கள் பொன்னிறமான கனவுகளோடு பல்கலைக்கழகத்துக்கு வருகிறார்கள். ஆனால் வேலைக்காக காத்திருப்பதிலேயே அவர்களுடைய கனவுகள் நிறமிழந்து போகின்றன. வயதுகளும் தொலைந்து போகின்றன.

எனவே இந்த விடயத்தில் தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டியது பட்டதாரிகள் மட்டுமல்ல, அரசாங்கமும் கல்விக் கொள்கைகளைத் திட்டமிடும் நிபுணர்களும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.குறிப்பாக ஈழத் தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை மிகப்பலமான நிதி வளம்மிக்க புலம்பெயர்ந்த சமூகம் ஒன்று உண்டு.புலம்பெயர்ந்த சமூக வாழ்க்கையை ஒரு சொர்க்கம் என்று கருதும் பட்டதாரிகளே அதிகம். ஓர் ஆங்கில ஆசிரியர் சொன்னார், இரண்டாவது பட்டப்படிப்புக்காக ஆங்கிலம் பயிலவரும் பெரும்பாலானவர்கள் புலப்பெயர்ச்சியை நோக்கமாகக் கொண்டவர்கள் என்று.ஓர் இளம் தலைமுறையினரின் மனதில் புலப்பெயர்ச்சி ஒரு கனவாகத் தொடர்ந்து காணப்படுகிறது.ஆனால் இந்த விடயத்தில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் உள்ள தொழில் முனைவோரும் தொழில் அதிபர்களும் தாயகத்தில் முதலீடு செய்யலாம்.புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கலாம். புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் நிதி ரீதியாக பிரகாசமான ஒரு முன்னுதாரணமாகத் திகழும் இந்த சமூகத்தில்,அதே புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தில் வெற்றிபெற்ற தொழில் முனைவோர் தாயகத்தில் முதலீடுகளைச்  செய்வதன்மூலம் தமது முன்னுதாரணங்களைப் பின்பற்றும் பட்டதாரிகளின் எண்ணிக்கையை,தொழில் முனைவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்.

தன் சொந்த பலத்தில்,தன் சொந்தக் காலில், தனது வேரிலேயே நிலைத்து நிற்கத் தேவையான துணிச்சலையும் நம்பிக்கையையும் புதிய தலைமுறைக்கு வழங்குவது தமிழ்த் தேசியவாத நோக்குநிலையில் கட்டாயமானது.அது தேசத்தைக் கட்டி எழுப்புவதன் ஒரு பகுதி. தனது வேர்களை அறுத்துக் கொண்டு ஓர் இளைய தலைமுறை புலம்பெயர முயற்சிப்பது என்பது தமிழ்த் தேசிய அரசியலின் தோல்வி. எனவே இந்த விடயத்தில் விசேஷமாக புலம்பெயர்ந்த தமிழ்த் தொழில் முனைவோருக்கு ஒரு பொறுப்பு உண்டு.அது அரசியல் அர்த்தத்தில் தேசத்தைக் கட்டியெழுப்பும்  ஒரு பொறுப்புத்தான். தமிழ்த் தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் ஒரு பொறுப்புத்தான்.

 

Related

Tags: நிலாந்தன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரத்தகம விபத்தில் உயிரிழந்த நண்பனை காண சென்றவர் விபத்தில் உயிரிழப்பு!

Next Post

அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் – சந்தேகநபருக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!

Related Posts

அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் – சந்தேகநபருக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!
இலங்கை

அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் – சந்தேகநபருக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!

2026-02-22
ரத்தகம விபத்தில் உயிரிழந்த நண்பனை காண சென்றவர் விபத்தில் உயிரிழப்பு!
இலங்கை

ரத்தகம விபத்தில் உயிரிழந்த நண்பனை காண சென்றவர் விபத்தில் உயிரிழப்பு!

2026-02-22
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம்!
இலங்கை

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம்!

2026-02-22
யாழ்.மாநகர சபையிடம் தீயணைப்பு வாகனங்கள் இல்லை: அனர்தம் ஏற்பட்டால் பாரிய அழிவுகள் ஏற்படும் – மாநகர உறுப்பினர் எச்சரிக்கை!
இலங்கை

யாழ்.மாநகர சபையிடம் தீயணைப்பு வாகனங்கள் இல்லை: அனர்தம் ஏற்பட்டால் பாரிய அழிவுகள் ஏற்படும் – மாநகர உறுப்பினர் எச்சரிக்கை!

2026-02-22
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாடு இன்று ஆரம்பம்!
இலங்கை

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாடு இன்று ஆரம்பம்!

2026-02-22
மன்னாரில் உணவகங்கள் மீது தொடரும் சட்ட நடவடிக்கை-ஒரு வாரத்தில் நான்கு உணவகங்கள் மீது நடவடிக்கை!
இலங்கை

மன்னாரில் உணவகங்கள் மீது தொடரும் சட்ட நடவடிக்கை-ஒரு வாரத்தில் நான்கு உணவகங்கள் மீது நடவடிக்கை!

2026-02-22
Next Post
அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் – சந்தேகநபருக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!

அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் - சந்தேகநபருக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் – சந்தேகநபருக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!

அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் – சந்தேகநபருக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!

0
வேலையற்ற பட்டதாரிகளை  உற்பத்தி செய்யும் சமூகம் ? நிலாந்தன்!

வேலையற்ற பட்டதாரிகளை  உற்பத்தி செய்யும் சமூகம் ? நிலாந்தன்!

0
ரத்தகம விபத்தில் உயிரிழந்த நண்பனை காண சென்றவர் விபத்தில் உயிரிழப்பு!

ரத்தகம விபத்தில் உயிரிழந்த நண்பனை காண சென்றவர் விபத்தில் உயிரிழப்பு!

0
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி இன்று!

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பம்!

0
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம்!

0
அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் – சந்தேகநபருக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!

அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் – சந்தேகநபருக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!

2026-02-22
வேலையற்ற பட்டதாரிகளை  உற்பத்தி செய்யும் சமூகம் ? நிலாந்தன்!

வேலையற்ற பட்டதாரிகளை  உற்பத்தி செய்யும் சமூகம் ? நிலாந்தன்!

2026-02-22
ரத்தகம விபத்தில் உயிரிழந்த நண்பனை காண சென்றவர் விபத்தில் உயிரிழப்பு!

ரத்தகம விபத்தில் உயிரிழந்த நண்பனை காண சென்றவர் விபத்தில் உயிரிழப்பு!

2026-02-22
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி இன்று!

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பம்!

2026-02-22
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம்!

2026-02-22

Recent News

அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் – சந்தேகநபருக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!

அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் – சந்தேகநபருக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!

2026-02-22
வேலையற்ற பட்டதாரிகளை  உற்பத்தி செய்யும் சமூகம் ? நிலாந்தன்!

வேலையற்ற பட்டதாரிகளை  உற்பத்தி செய்யும் சமூகம் ? நிலாந்தன்!

2026-02-22
ரத்தகம விபத்தில் உயிரிழந்த நண்பனை காண சென்றவர் விபத்தில் உயிரிழப்பு!

ரத்தகம விபத்தில் உயிரிழந்த நண்பனை காண சென்றவர் விபத்தில் உயிரிழப்பு!

2026-02-22
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி இன்று!

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பம்!

2026-02-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.