யாஷ் கதாநாயகனாக நடிக்கும் ’ டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் குரோன்-அப்ஸ்’ படத்தை நடிகை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இதில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த் என பலர் நடித்துள்ளனர். கன்னடம், ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இப்படத்தை விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தைத் தயாரித்துள்ள கேவிஎன் புரொடக் ஷன்ஸ் நிறுவனம் யாஷின் மாஸ்டர்மைண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் மார்ச் 19-ம் திகதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான புரமோஷன் பணிகள் தொடங்கி இருந்தன
இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் நடந்து வரும் போர் காரணமாகப் படத்தின் ரிலீஸ் திகதியை, ஜூன் 4-ம் திகதிக்குத் தள்ளி வைத்துள்ளனர். இதுபற்றி படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தப் படம் இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுடன் இணைவதற்கான நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்துக்கு வளைகுடா நாடுகள் முக்கிய சந்தையாக இருப்பதால், அங்கு நடைபெற்று வரும் சூழ்நிலைகளைத் தயாரிப்பாளர்கள் மிகுந்த கவனத்துடன் கண்காணித்து வந்தனர். விநியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு, நீண்ட யோசனைக்குப் பிறகு ரிலீஸ் திகதியை மாற்றியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.


















