இந்தியாவின் மூத்த திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு தொடர்பான பிற நோய்களால் இன்று (10) காலை சென்னையில் காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 84.
அவரது மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.
அவரது இறுதிச் சடங்கு குறித்த மேலதிக விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் இந்தச் செய்தியை உறுதிசெய்து வருத்தம் தெரிவித்தனர்.
அந்த செய்தியியில், எங்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான புகழ்பெற்ற இயக்குநர் திரு. பாரதிராஜா இன்று அதிகாலையில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் – என்று கூறியுள்ளனர்.
அவரது மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா, 2024 மார்ச் மாதம் தனது 48 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானதிலிருந்து, பாரதிராஜாவின் உடல்நிலை மோசமடைந்து வந்தது.
மனோஜின் மரணம் மற்றும் இறுதிச் சடங்குகளின்போது வெளியான காட்சிகள், அந்த இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் நிலைகுலைந்து தவித்த பாரதிராஜாவைக் நிலையினை வெளிக்காட்டியிருந்தன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மூச்சுத்திணறல் உள்ளிட்ட சுவாசப் பிரச்சனைகள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, பாரதிராஜா சென்னை டி நகரில் உள்ள ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பாரதிராஜா தனது மகன் பிறந்து ஒரு வருடம் கழித்து 1977 இல் 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
அவர் 40 படங்களுக்கு மேல் இயக்கி நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ‘இயக்குனர் இமயம்’ என்று அறியப்பட்டார்.
கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஒய்வதில்லை, காதல் ஓவியம் மற்றும் முதல் மரியத்தை ஆகியவை இயக்குனராக அவரது மிகச் சிறந்த படங்களில் அடங்கும்.
இவர் அண்மையில் மோகன்லாலின் தொடரும் படத்தில் நடித்ததன் மூலம் பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார்.














