மேல் மாகாணத்தில் குற்றத் தடுப்பு முயற்சிகளை வலுப்படுத்தும் நோக்கில், புதிய வாட்ஸ்அப் தகவல் சேவை ஒன்றை இலங்கை பொலிஸ் தொடங்கியுள்ளது.
அதன்படி இதற்காக 0777128128 என்ற இலக்கம் 24 மணி நேரமும் செயல்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் பொதுமக்கள் குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த இலக்கத்தின் மூலமாக அனுப்பப்படும் செய்திகள், மேற்கு மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கைகள் மையத்திற்கு அனுப்பப்படும்.
தகவல் அளிக்கும் நபர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் இலங்கை பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.












