தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா இல்லையா என்பது குறித்து இன்று (23) தீர்மானம் எடுக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வால் தமது துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்தார்.
பாண் உட்பட அனைத்து பேக்கரிப் பொருட்களின் உற்பத்தி முதல் விநியோகம் வரை எரிபொருள் ஒரு அத்தியாவசிய காரணி என்று அவர் கூறினார்.













