ஹர்முஸ் நீரிணையை அடுத்த 48 மணி நேரத்திற்குள் மீண்டும் திறக்க வேண்டும், இல்லாவிட்டால் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (04) விடுத்த எச்சரிக்கையை தெஹ்ரான் நிராகரித்துள்ளது.
வொஷிங்டனின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் நிலையில், ஈரானிய எரிசக்தி நிலையங்கள் மீது சாத்தியமான தாக்குதல்களைத் தொடுப்பதற்குத் தயாராகி வருவதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், இரண்டு அஈமெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, காணாமல் போன அமெரிக்க விமான ஊழியர் ஒருவரை அமெரிக்க மற்றும் ஈரானியப் படைகள் தேடி வரும் நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டரம்பின் இந்த எச்சரிக்கை வந்தது.
இது குறித்து சமூக ஊடகப் பதிவில், அவர்கள் (ஈரான்) மீது கடும் தாக்குதல் நடத்தப்படுவதற்கு இன்னும் 48 மணி நேரமே உள்ளது. நேரம் விரைந்து கொண்டிருக்கிறது – என்று எழுதி ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான சாத்தியமான தாக்குதல்கள் உள்ளிட்ட தனது முந்தைய எச்சரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தினார்.
எனினும், இந்த எச்சரிக்கை வெளியான சிறிது நேரத்திலேயே அதனை நிராகரித்த ஈரானின் மூத்த இராணுவ அதிகாரி ஜெனரல் அலி அப்தொல்லாஹி அலியாபாடி (Ali Abdollahi Aliabadi), நரகத்தின் வாயில்கள் உங்களுக்காகத் திறக்கப்படும் என்று கடுமையான வார்த்தைகளால் அமெரிக்காவுக்கு பதிலளித்தார்.
இதனிடையே, நேற்றைய தினமும் வளைகுடா நாடுகள், ஈராக் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் மேலும் பல ஏவுகணைகளை ஏவியது.
இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகளின் சிதறல்கள் பல பகுதகிளில் விழுந்து சேதத்தை ஏற்படுத்தின.
அதன் பின்னர், இஸ்ரேல், பஹ்ரைன், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் ஒரே இரவில் மேலும் பல தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.













