கடந்த வாரம் வடக்கு லண்டனில் யூத தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தீ வைப்புத் தாக்குதல் தொடர்பாக நான்காவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக லண்டன் பெருநகர காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்ட மூன்று ஆண்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள லண்டன் நீதிமன்றத்திலேயே இந்தக் கைது நடவடிக்கை நேற்றைய தினம் நிகழ்ந்ததாகவும் அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
தாக்குதலைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்கள் நேற்றுக் காலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
20 வயதான ஹம்சா இக்பால் மற்றும் 19 வயதான ரேஹான் கான் என்ற இரண்டு பிரிட்டிஷ் ஆண்களும், பிரிட்டிஷ்-பாகிஸ்தான் இரட்டைக் குடியுரிமை பெற்ற 17 வயது சிறுவன் ஒருவனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் ஆவர்.
சொத்துக்களைச் சேதப்படுத்தும் நோக்கத்துடன் தீ வைத்தல் மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படுமா என்பதைப் பொருட்படுத்தாமல் அலட்சியமாக இருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.













