வெளிவிகாரத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி இந்தியா – அமெரிக்கா உறவுகளின் முன்னேற்றத்துக்காக மூன்று நாள் பயணமாக நாளை வொஷிங்டன் டி.சி.க்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
திட்டமிடப்பட்டுள்ள ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 10 வரையிலான அவரது அமெரிக்கப் பயணம் முக்கியத் துறைகளில் நடைபெற்று வரும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்துச் செல்ல ஒரு வாய்ப்பை வழங்கும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வர்த்தகம், பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அத்துடன் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து வெளிவிகாரச் செயலாளர், அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளுடன் இந்த பயணத்தின் போது கலந்துரையாடுவார் என்றும் அந்த அறிக்கையில் இந்திய வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தப் பயணம், கடந்த பெப்ரவரியில் வெளிவிகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வொஷிங்டன் டி.சி.க்கு மேற்கொண்ட பயணத்தைத் தொடர்ந்து நடைபெறுகிறது.













