கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற 15ஆவது ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினை 3 விக்கெட்டுக்களை வித்தியாசத்த்தில் வீழ்த்தி லக்னோவ் சுப்பர் ஜய்ன்ட்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியுடன் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ், அணிகள் நிலையில் 5ஆம் இடத்திலிருந்து 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த லக்னோவ் சுப்பர் ஜய்ன்ட்ஸ் அணி முதலில் பந்து வீச்சினை தெரிவு செய்திருந்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
அணித் தலைவர் அஜின்கியா ரஹானே 41 ஓட்டங்களுடன் ஆட்மிழந்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 182 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்டெக்களை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
நேற்றைய போட்டியில் ஆட்டநாயகனாக முகுல் சௌதரி தெரிவு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.















