உத்தர பிரதேசத்தில் பாயும் யமுனை ஆற்றில் சென்ற படகு கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.
உத்தர பிரதேசத்தில் மதுரா மாவட்டத்தில் பாயும் யமுனை ஆற்றில் பஞ்சாபைச் சேர்ந்த 30 பயணியருடன் படகு ஒன்று நேற்று புறப்பட்டது.
விருந்தாவன் கோட்வாலி பகுதியில் சென்றபோது திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பயணியர் அனைவரும் ஆற்றில் விழுந்த நிலையில் தகவல் அறிந்து வந்த மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளூர் நீச்சல் வீரர்கள் 50 பேரின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் 16 பயணியர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன் 10 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
மேலும் பலர் மாயமானதை அடுத்து அவர்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.














