ஹோர்மூஸ் நீரிணையை நெருங்கும் ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரிக்கும் நிலையில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தொடங்கிய தாக்குதல் சுமார் 6 வாரங்களாக நீடித்தது.
இந்த நிலையில் ஹோர்மூஸ் நீரிணையை நெருங்கும் ஈரானிய கப்பல்களை உடனடியாக தாக்கி அழிக்க அமெரிக்க இராணுவம் தயாராக உள்ளதாக டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானின் கடற்படை பலம் குறைந்திருந்தாலும்இ அதிவேக சிறிய கப்பல்கள் இன்னும் உள்ளன. அவற்றை அழிக்க கடலில் போதைப்பொருள் கடத்தல் படகுகளை எதிர்கொள்ள பயன்படுத்திய நடைமுறைகள் பின்பற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் நிலவி வருகிறது. இதனால் சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளது.














