தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டைகள் (NICs) வழங்கும் பணி, இன்று (20) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொதுச் சேவைகளும் இன்று முதல் வழமைபோல் இடம்பெறும்.
திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, ஏப்ரல் 17 முதல் இந்தச் சேவைகள் தற்காலிமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
தொழில்நுட்பச் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அனைத்து சேவைகளும் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.













