ஈரான் கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கா கடற்படை இடைமறித்து கைப்பற்றியதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதை அடுத்து, ஆசியாவில் திங்கட்கிழமை (20) காலை வர்த்தகத்தில் உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்தன.
வர்த்தகக் கப்பல்களுக்காக ஹார்முஸ் நீரிணை நீர்வழியை மீண்டும் மூடுவதாகவும், அதனை நெருங்கும் எந்தக் கப்பலும் குறிவைக்கப்படும் என்றும் ஈரான் சனிக்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரென்ட் மசகு எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள் ஒரு பீப்பாய்க்கு 4.74% உயர்ந்து $94.66 (£70.11) ஆகவும், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயக்கு 5.6% உயர்ந்து $88.55 ஆகவும் வர்த்தகமாகனது.
பெப்ரவி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதற்கும், அதற்குப் பதிலடியாக தெஹ்ரான், உலகின் சுமார் 20% எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) கடந்து செல்லும் அந்த நீர்வழிப்பாதையில் கப்பல் போக்குவரத்தைக் குறிவைப்போம் என்று அச்சுறுத்தல் விடுத்ததற்கும் பின்னரும், எரிசக்தி சந்தைகள் பெரும் ஏற்ற இறக்கங்களைக் கண்டு வருகின்றன.
முன்னதாக, பேச்சுவார்த்தைகளுக்காகத் தனது பிரதிநிதிகள் திங்கள்கிழமை பாகிஸ்தானில் இருப்பார்கள் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.
அமெரிக்கக் குழுவிற்குத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தலைமை தாங்குவார் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால், பேச்சுவார்த்தைகளில் தற்போதைக்கு பங்கேற்க தெஹ்ரானுக்கு எந்தத் திட்டமும் இல்லை என்று ஈரானின் அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
இருப்பினும், ஈரானிய அதிகாரிகள் தங்கள் நாட்டின் நிலைப்பாட்டை இன்னும் தெளிவுபடுத்தவில்லை.















