குறிகட்டுவான் இறங்கு துறையின் இரண்டாம் கட்ட புனரமைப்பு பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வு நாளை மறுதினம் காலை 09மணிக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது
இவ் புனரமைப்பிற்காக 984.73 மில்லியன் ரூபா செலவிடப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன் இவ் இறங்குதுறை புதிய தோற்றத்துடன் பல தசாப்தங்களின் பின் மீள நிர்மாணிக்கப்பட உள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 05ஆம் திகதி இறங்குதுறைக்கான முதலாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, துரித கதியில் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் , தற்போது இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.















