கொழும்பு உள்ளிட்ட மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் ஒருவர் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்தத் தயாராகி வருவதாக சமூக ஊடகங்களிலும் சில இணையதளங்களிலும் வெளியிடப்பட்ட செய்திகள் முற்றிலும் போலியானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான எஃப். யூ. வுட்லர் தெரிவித்தார்.
அதுபோன்ற சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்று அவர் மேலும் உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், காஞ்சிபான் இம்ரானுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த ஒருவர் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சந்தேக நபர் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.















