அஸ்வெசும உதவித் திட்டத்தின் கீழ் முதியோருக்கான உதவித்தொகை, சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று (22) வைப்பிலிடப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, முதல் கட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட 617,406 முதியர்வகளுக்கும், இரண்டாம் கட்டத்தில் 72,525 முதியவர்களுக்கும் இந்த நிதி வைப்பிலிடப்படும்.
சம்பந்தப்பட்ட பயனாளிகள் இன்றிலிருந்து தங்களுக்கு வசதியான பயனாளி கணக்குகள் மூலம் தங்களது உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்.













