தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஆனால், ஆட்சி அமைக்க, 118 எம்.எல்.ஏ.,கள் ஆதரவு வேண்டும்.
அதன்படி, தமிழக வெற்றி கழகத்துக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைக்க, வேறு கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.
தமிழக வெற்றி கழகத்துக்கு பெரும்பான்மை கிடைக்காததால், விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றி கழகத்தை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் விஜய் வலியுறுத்தி உள்ளார்.
இதேவேளை, பெரும்பான்மையை நிரூபிக்க விஜய் 14 நாட்கள் அவகாசம் கேட்டு உள்ளார்.















