தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதற்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
108 இடங்களை வென்ற தவெக ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை அக்கட்சி நாடியுள்ளது.
இதனிடையே, திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்கியிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இன்று அவசரமாக சென்னை திரும்புகின்றனர். புதிய அரசு அமையும் வரை அவர்கள் சென்னையில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட உள்ளனர்.
மறுபுறம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அவசர முடிவுகளை எடுக்க அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயற்குழுக் கூட்டங்கள் இன்று நடைபெறவுள்ள நிலையில், அவர்கள் யாருக்கு ஆதரவு அளிப்பார்கள் என்பதைப் பொறுத்தே, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் இறுதி முடிவு எட்டப்படும்.















