எயார்பஸ் ஒப்பந்தம் மற்றும்; கொடுக்கல்; – வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 12ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடிதம் இன்று தங்காலை, கார்டன் இல்லத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் சி.இ.ஓ கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்த 24 மணித்தியாலங்களுக்குள் இந்தக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த கொடுக்கல் வாங்கலில்;, 60 மில்லியன் ரூபாவை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கியதாக கபில சந்திரசேன கூறியுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்திருந்தது.
இருப்பினும், இதனை மறுத்துள்ள கபில சந்திரசேனவின் சட்டத்தரணி ரியன்சி அர்ஸகுலரத்ன, தனது கட்சிக்காரரை அச்சுறுத்தி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இந்த வாக்குமூலத்தைப் பெற்றுள்ளதாக நீதிமன்றில் சத்தியக்கடதாசி ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த விசாரணைக்காகவே முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் 12 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்















