தமிழக முதல்வர் பதவியேற்பில் தொடர்ந்தும் இழுபறி நீடித்துவரும் நிலையில் அ தி முக உறுப்பினர்கள் சிலர் தமிழகவெற்றிக்கழகத்தின் ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுடன்விடுதலை சிறுத்தைகள் கட்சியின நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை தமிழகவெற்றிக்கழகத்தின் தலைவர்; முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ள நிலையில் திமழக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றில் மற்றுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் நிலவி வந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்துள்ளதாக இந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன
தமிழகத்தில் நடைபெற்றுமுடிவடைந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றபோதிலும் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தது.
அதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன.
இதன் மூலம் த.வெ.க. 116 எம்.எல்.ஏ. பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது.
இருப்பினும் ஆட்சி அமைக்க இன்னும் 2 உறுப்புரிமை தேவைப்படுகின்ற நிலையில் இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்
இதனையடுத்து, த.வெ.க ஆட்சி அமைக்க வி.சி.க தலைவர் திருமாவளவன் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ள சந்தர்ப்பத்தில் அடுத்த நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்புகள் தீவிரமாகியுள்ளது
இதேவேளை தமிழகவெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை நிர்வாகிகயுளுடன் ஆலோசனை மேற்கொண்டுவந்த நிலையில் நீலாங்கரையில் இருந்து தற்போது பட்டினம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தினை வந்தடைந்துள்ளார்
முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது
இதனிடையே அ தி முக உறுப்பினர்கள் சிலர் த வெ கவுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
இதனால் தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்புமுனை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே தமிழக மேலதிக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் இன்று இரவு கேரளா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
அத்துடன் தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில் ஆட்சிஅமைக்கக்கோரி ஆளுநரிடம் கடிதம் கையளித்துள்ள போதிலும் ஆளுநர் கட்சியின் தலைவர் விஜய்யை அழைக்கவில்லை என்பதுடன் மாறாக பெரும்பான்மை உறுப்பினர்களின் பட்டியலை வழங்குமாறு கோரிக்கை விடுத்துவருகின்றார்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினரான எழிலரசி என்பவர் உச்சநீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்யை ஆட்சி அமைப்பதற்கு ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என ரிட் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது
அத்துடன் இந்த கோரிக்கையினை முன்வைத்து உச்சநீதிமன்றில் மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 118 என்கிற பெரும்பான்மையை கடந்துள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகம், தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 என்ற இலக்கினை அடைய மேற்கொண்ட முயற்சி இறுதியில் வெற்றிபெற்றுள்ளது














