மத்திய ஆப்பிரிக்காவில் தீவிரமாகப் பரவி வருகின்ற எபோலா வைரஸ் தொற்றுக்குள்ளான பகுதியிலிருந்து வந்த பயணி ஒருவர், தவறுதலாக விமானத்தில் ஏறியநிலையில் பாரிஸிலிருந்து அமெரிக்கா நோக்கிப் பயணித்த ஏர் பிரான்ஸ் விமானம் அவசரமாகக் கனடாவில் தரையிறக்கப்பட்டது.
மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தற்போது எபோலா வைரஸின் மிக அரிதான ‘புண்டிபுகியோ’ வீரியக் கிருமிப் பரவல் காரணமாக இதுவரை கிட்டத்தட்ட 140 பேர் உயிரிழந்துள்ளனர் அத்துடன் 600 க்கும் மேற்பட்டோர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் கூற்றுப்படி, நோய்த்தொற்று உள்ளவர்களில், நோய் அறிகுறிகளைக் வெளியான பின்னரே எபோலா ஒருவருக்கொருவர் பரவும் தன்மையை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கொங்கோ, உகாண்டா அல்லது தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்குச் சென்ற அமெரிக்க கடவுச்சீட்டு இல்லாத வெளிநாட்டுப் பயணிகள், அமெரிக்காவிற்குள் நுழைய தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எபோலா வைரஸ் தொற்றுக்குள்ளான பகுதியிலிருந்து வந்த பயணி ஒருவர், தவறுதலாக விமானத்தில் ஏறியநிலையில் பாரிஸிலிருந்து அமெரிக்கா நோக்கிப் பயணித்த ஏர் பிரான்ஸ் விமானம் அவசரமாகக் கனடாவில் தரையிறக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

















